மரணமென்னும் முடிவைநோக்கி
. மனித வாழ்வு அடையும் போது
. மனங் கலங்கி அழுதுகொள்வதேன்
கரணம்போடும் வாழ்வில் என்றும்
. கடைசிஎன்ற முடிவும் உண்டு
. கருதுமெண்ணம் மறந்து போவதேன்
குரலுங் கொண்டு கதறி யோங்கிக்
. குத்தி மார்பில் ஓலமிட்டும்
. கொண்ட வாழ்வைத் தெய்வம் நல்குமோ
பரவுமாசை நெஞ்சில் கொண்டு
. பாய் படுத்த மேனி கண்டு
. பயனுமின்றிக் குரல் கடுப்பதோ
வரவும் பின்னர் செலவுமென்று
. வானெழுந்த தெய்வம் நின்று
. வகையறிந்து செய்த வாழ்வைய்யா
தரவுந் தந்த பின்பறித்துத்
. தரையில் போட்டும் உடலழித்து
. தாயைத் தாரம் தம்பி தங்கையை
பரவ நெஞ்சில் பாசமென்னும்
. பரிவுகொள்ள மாயம் செய்து
. பிரிவு சோகம் தீபொசுக்கிட
புரவும் மேகம் தொலையும் வானில்
. போய்ப் பறந்து விண்ணிலேகும்
. போலும் வாழ்வை கொள்ளவிட்டவள்
கரமும் இரண்டு காலுமீந்து
. காதல்கொண்டு வாழ்ந்து பின்னர்
. கடைவழிக்கு உயர வாருங்கள்
துரவும் மேடுபள்ளமென்று
, தொடரும் துன்பம் பலபடைத்து
, தோல்வி யென்று வாழ்வைக் கண்டபின்
உரசும் தென்றல் உள்ள வானில்
, உலவுமேகம் தொட்டுப் பின்னர்
. உதயமாகும் ஒளியைத் தாண்டியும்
வரமுமீந்து வழியுமாக்கி
. வாழ்வு மென்று மொழியும்பேசி
. வதைபட்டான நிலையில் மீட்பவள்
அரண்டு மாயை அழகுஎன்றும்
. அவனிமீது அறிவுமற்ற
. இருளின் போதை எம்மை வாட்டவும்
பரமஞான ஏழைகண்டு
. பரிவுகொண்டு இன்னல்நீங்க
. பயணமாகு என்று சொன்னவள்
மரமுமாக்கி மலையுமாக்கி
. மதியினோடு அனல்செறிந்த
. மழையின்மேகம் மூடும் கதிரையும்
சிரமமின்றிச் செய்த சக்தி
. சேரும் ஆன்மபந்தம் கண்டு
. சிறந்ததென்று சிந்துபுன்னகை
.
**********************
. மனித வாழ்வு அடையும் போது
. மனங் கலங்கி அழுதுகொள்வதேன்
கரணம்போடும் வாழ்வில் என்றும்
. கடைசிஎன்ற முடிவும் உண்டு
. கருதுமெண்ணம் மறந்து போவதேன்
குரலுங் கொண்டு கதறி யோங்கிக்
. குத்தி மார்பில் ஓலமிட்டும்
. கொண்ட வாழ்வைத் தெய்வம் நல்குமோ
பரவுமாசை நெஞ்சில் கொண்டு
. பாய் படுத்த மேனி கண்டு
. பயனுமின்றிக் குரல் கடுப்பதோ
வரவும் பின்னர் செலவுமென்று
. வானெழுந்த தெய்வம் நின்று
. வகையறிந்து செய்த வாழ்வைய்யா
தரவுந் தந்த பின்பறித்துத்
. தரையில் போட்டும் உடலழித்து
. தாயைத் தாரம் தம்பி தங்கையை
பரவ நெஞ்சில் பாசமென்னும்
. பரிவுகொள்ள மாயம் செய்து
. பிரிவு சோகம் தீபொசுக்கிட
புரவும் மேகம் தொலையும் வானில்
. போய்ப் பறந்து விண்ணிலேகும்
. போலும் வாழ்வை கொள்ளவிட்டவள்
கரமும் இரண்டு காலுமீந்து
. காதல்கொண்டு வாழ்ந்து பின்னர்
. கடைவழிக்கு உயர வாருங்கள்
துரவும் மேடுபள்ளமென்று
, தொடரும் துன்பம் பலபடைத்து
, தோல்வி யென்று வாழ்வைக் கண்டபின்
உரசும் தென்றல் உள்ள வானில்
, உலவுமேகம் தொட்டுப் பின்னர்
. உதயமாகும் ஒளியைத் தாண்டியும்
வரமுமீந்து வழியுமாக்கி
. வாழ்வு மென்று மொழியும்பேசி
. வதைபட்டான நிலையில் மீட்பவள்
அரண்டு மாயை அழகுஎன்றும்
. அவனிமீது அறிவுமற்ற
. இருளின் போதை எம்மை வாட்டவும்
பரமஞான ஏழைகண்டு
. பரிவுகொண்டு இன்னல்நீங்க
. பயணமாகு என்று சொன்னவள்
மரமுமாக்கி மலையுமாக்கி
. மதியினோடு அனல்செறிந்த
. மழையின்மேகம் மூடும் கதிரையும்
சிரமமின்றிச் செய்த சக்தி
. சேரும் ஆன்மபந்தம் கண்டு
. சிறந்ததென்று சிந்துபுன்னகை
.
**********************