நிலமீதில் உயிர்கொண்டு நெடுவானத்திடைநின்று
நிலைகொள்ளப் புவி மீதிலே
குலமாதின் வயிற்றோடு குடிகொண்டு விளைந்தங்கு
குரல் கொண்டு அழுதேவந்தேன்
பலமான உதைபோட்டு பணிவின்றித் தாயோடு
பலக்காலம் துயர் ஈந்தபின்
நலமான தெனஎண்ணி நானோடிப் பிரிந்தேன் இந்
நாள்எங்கு நான் செல்கிறேன்
ஓராண்டு புவிவாழ்ந்த உயர் மனத் துணிவோடே
எழுந்து நான் நடைபயின்றேன்
சீராகக் கால்வைத்து திடமாக இல்லாமல்
தினம்தினம் விழுந்தெழுந்தேன்
வாராயோ செல்வமே வளர்நிலா வாவென்று
வார்த்தையின் அன்புகாட்டி
ஆராரோ தூங்கடா அன்பேயென் அமுதேயென்
றன்னை யின்மடி கிடந்தேன்
வீராதி வீரர்களின் வெற்றியும் தோல்வியும்
வெள்ளி நிலவில் இருத்தி
சேராத அறிவூட்டச் சிந்தனை விளங்கிடத்
சிறப்பான கதைகள் கூறி
நேராக வழிகாட்டி நிறை ஐந்துவயதிலே
நில்லென்று தமிழ் குழைத்து
சீராக ஊட்டினள் தேனெனும் தித்திப்பைத்
தேகத்தில் சேர்த்துவிட்டாள்
நீராகும் விழிகொண்ட நேரங்கள் அறியேன் என்
நெஞ்சத்தில் மகிழ்வேகொண்டு
வேராகத் தமிழ்பற்றி விளைந்தேன் என் வானத்தில்
வெகுவான கனவுக்கோலம்
தேராய் நற்கற்பனை தீட்டியதைக் கொண்டேநான்
திக்கெங்கும் பறந்துமோடி
சேராத பொன் எண்ணிச் செல்வந்த ரூபனாய்
தினம்தினம் மகிழ்ந்தாடினேன்
பூவெனும் மங்கையும் பொன்மேனி கொள்ளெழில்
புன்னகை சொர்க்கம் என்றே
பாவெனும் மொழிகூறிப் பக்கம் நெருங்கிடப்
பைந்தமிழ் இனித்த தன்றே
வாவெனும் பூஞ்சோலை வண்டென வாழ்வெண்ணி
வலிந்து நான் போனபாதை
நோவெனும் உணர்வோங்க நெஞ்சத்தில் பிழையாக
நேரற்ற பாதை கொண்டேன்
வேதனைத் துயர் வீட்டு வெறுமையும் ஏழ்மையும்
விதி தந்து பரிகசிக்க
சாதனை யேது நல் தருமத்தின் துணையின்றித்
தமிழ் மீது கோபங்கொண்டேன்
தீததைத் தந்ததேன் திசைமாறிச்சென்றதேன்
திரும்ப வழி இலை என்றதும்
ஏததை மாற்றவென் றியற்கையின் பொன்மொழி
என் தமிழ் மூடிவைத்தேன்
வாழ்விலெவை உண்மைநிலை வழிஎன்ன பொருள்என்ன
வரும் செல்வம் ஒன்றேயெண்ணி
தாழ்வில் வழி செல்லாமல் தரைமீது வீழாமல்
திசைவேறு நோக்கி நடந்தேன்
ஏழ்மையெனை விட்டகல எடுத்த அடி பூமலர
இருந்தவோர் பாதைகண்டும்
ஆழ்மனதில் இன்பமிலை ஆனந்த உணர்வுமிலை
அகத்திலே வெறுமைகொண்டேன்
சூனியத்தில் நின்றேனோ சுதந்திரம் இழந்தேனோ
துடித்துமனம் விழிசிவக்க
நானிதயம் கொண்டேனோ நம்பாமல் எப்போதும்
நாடியுணர்ந் ததிசயித்தேன்
பாநிதமும் கொண்டாலும் பைந்தமிழை மறந்தவனே
பாவநிலை விடுமா எண்ணி
வானின் இடி பெய்தமழை வந்தொழிய காணமைதி
வாய்த்தநிலை கொண்டயர்ந்தேன்
வையக வாழ்விதனில் வாய்த்தநல் லனுபவமே
வாழ்நெறி ஆசிரியனாம்
மெய்யகத் தெளிவோடு மனமோநல் லறிவோங்கி
முழுவாழ்வு முறையுங் கற்போம்
ஐயகோ என்ன விதி அத்தனையும் கண்டறிய
அடையுமே வாழ்வின் முடிவும்
பொய்யுடலைக் கொள் ஆயுள் போயினவென் றுயிர்பற்றிப்
பிணமாக்கும் விதியின்கரங்கள்
போகின்ற பாதைதனும் புரிவதேயில்லை நாம்
புவிமீது வாழும்வேளை
ஆகின்ற வேளையதில் அறிவென்ப உணர்வோடும்
அடிக்கடி சண்டை போட்டு
வேகின்ற உடல்மீது வெண்ணையை வார்த்தழலை
விரைந்துமே கூட்டிவிட்டே
சாகின்ற வேளைவரை தர்மத்தின் விழிகளினை
தடுத்தின்பம் கொள்ளுமன்றோ
எங்கே நான் போகின்றேன் இதைஅறிவ தல்லேன் யான்
எடுக்கின்ற காலடிதனும்
அங்கவளின் சக்தியருள் அகநோக்கில் அமைகவென
அன்னைதனை வேண்டுகின்றேன்
பொங்குமென் மனம்மீது புன்னகைச் சரம்கொண்டு
பூசித்து வேண்டிநின்றேன்
எங்கு நான் செல்கின்றேன் இருட்காட்டில் நடக்கின்றேன்
இறையே உன்னொளி வேண்டினேன்
நிலைகொள்ளப் புவி மீதிலே
குலமாதின் வயிற்றோடு குடிகொண்டு விளைந்தங்கு
குரல் கொண்டு அழுதேவந்தேன்
பலமான உதைபோட்டு பணிவின்றித் தாயோடு
பலக்காலம் துயர் ஈந்தபின்
நலமான தெனஎண்ணி நானோடிப் பிரிந்தேன் இந்
நாள்எங்கு நான் செல்கிறேன்
ஓராண்டு புவிவாழ்ந்த உயர் மனத் துணிவோடே
எழுந்து நான் நடைபயின்றேன்
சீராகக் கால்வைத்து திடமாக இல்லாமல்
தினம்தினம் விழுந்தெழுந்தேன்
வாராயோ செல்வமே வளர்நிலா வாவென்று
வார்த்தையின் அன்புகாட்டி
ஆராரோ தூங்கடா அன்பேயென் அமுதேயென்
றன்னை யின்மடி கிடந்தேன்
வீராதி வீரர்களின் வெற்றியும் தோல்வியும்
வெள்ளி நிலவில் இருத்தி
சேராத அறிவூட்டச் சிந்தனை விளங்கிடத்
சிறப்பான கதைகள் கூறி
நேராக வழிகாட்டி நிறை ஐந்துவயதிலே
நில்லென்று தமிழ் குழைத்து
சீராக ஊட்டினள் தேனெனும் தித்திப்பைத்
தேகத்தில் சேர்த்துவிட்டாள்
நீராகும் விழிகொண்ட நேரங்கள் அறியேன் என்
நெஞ்சத்தில் மகிழ்வேகொண்டு
வேராகத் தமிழ்பற்றி விளைந்தேன் என் வானத்தில்
வெகுவான கனவுக்கோலம்
தேராய் நற்கற்பனை தீட்டியதைக் கொண்டேநான்
திக்கெங்கும் பறந்துமோடி
சேராத பொன் எண்ணிச் செல்வந்த ரூபனாய்
தினம்தினம் மகிழ்ந்தாடினேன்
பூவெனும் மங்கையும் பொன்மேனி கொள்ளெழில்
புன்னகை சொர்க்கம் என்றே
பாவெனும் மொழிகூறிப் பக்கம் நெருங்கிடப்
பைந்தமிழ் இனித்த தன்றே
வாவெனும் பூஞ்சோலை வண்டென வாழ்வெண்ணி
வலிந்து நான் போனபாதை
நோவெனும் உணர்வோங்க நெஞ்சத்தில் பிழையாக
நேரற்ற பாதை கொண்டேன்
வேதனைத் துயர் வீட்டு வெறுமையும் ஏழ்மையும்
விதி தந்து பரிகசிக்க
சாதனை யேது நல் தருமத்தின் துணையின்றித்
தமிழ் மீது கோபங்கொண்டேன்
தீததைத் தந்ததேன் திசைமாறிச்சென்றதேன்
திரும்ப வழி இலை என்றதும்
ஏததை மாற்றவென் றியற்கையின் பொன்மொழி
என் தமிழ் மூடிவைத்தேன்
வாழ்விலெவை உண்மைநிலை வழிஎன்ன பொருள்என்ன
வரும் செல்வம் ஒன்றேயெண்ணி
தாழ்வில் வழி செல்லாமல் தரைமீது வீழாமல்
திசைவேறு நோக்கி நடந்தேன்
ஏழ்மையெனை விட்டகல எடுத்த அடி பூமலர
இருந்தவோர் பாதைகண்டும்
ஆழ்மனதில் இன்பமிலை ஆனந்த உணர்வுமிலை
அகத்திலே வெறுமைகொண்டேன்
சூனியத்தில் நின்றேனோ சுதந்திரம் இழந்தேனோ
துடித்துமனம் விழிசிவக்க
நானிதயம் கொண்டேனோ நம்பாமல் எப்போதும்
நாடியுணர்ந் ததிசயித்தேன்
பாநிதமும் கொண்டாலும் பைந்தமிழை மறந்தவனே
பாவநிலை விடுமா எண்ணி
வானின் இடி பெய்தமழை வந்தொழிய காணமைதி
வாய்த்தநிலை கொண்டயர்ந்தேன்
வையக வாழ்விதனில் வாய்த்தநல் லனுபவமே
வாழ்நெறி ஆசிரியனாம்
மெய்யகத் தெளிவோடு மனமோநல் லறிவோங்கி
முழுவாழ்வு முறையுங் கற்போம்
ஐயகோ என்ன விதி அத்தனையும் கண்டறிய
அடையுமே வாழ்வின் முடிவும்
பொய்யுடலைக் கொள் ஆயுள் போயினவென் றுயிர்பற்றிப்
பிணமாக்கும் விதியின்கரங்கள்
போகின்ற பாதைதனும் புரிவதேயில்லை நாம்
புவிமீது வாழும்வேளை
ஆகின்ற வேளையதில் அறிவென்ப உணர்வோடும்
அடிக்கடி சண்டை போட்டு
வேகின்ற உடல்மீது வெண்ணையை வார்த்தழலை
விரைந்துமே கூட்டிவிட்டே
சாகின்ற வேளைவரை தர்மத்தின் விழிகளினை
தடுத்தின்பம் கொள்ளுமன்றோ
எங்கே நான் போகின்றேன் இதைஅறிவ தல்லேன் யான்
எடுக்கின்ற காலடிதனும்
அங்கவளின் சக்தியருள் அகநோக்கில் அமைகவென
அன்னைதனை வேண்டுகின்றேன்
பொங்குமென் மனம்மீது புன்னகைச் சரம்கொண்டு
பூசித்து வேண்டிநின்றேன்
எங்கு நான் செல்கின்றேன் இருட்காட்டில் நடக்கின்றேன்
இறையே உன்னொளி வேண்டினேன்
No comments:
Post a Comment