நேற்றிருந்தேன் இன்றிருந்தேன் நாளை நானில்லை
நின்று சுழல் பூமிகொண்ட நிழலு மங்கில்லைதோற்றவனாய் திரும்புவதே ஈற்றில் என்னிலைதூய்மைகொண்டே தூரத் தெரியும் தீயென் சக்தியைநீற்றென உடலாக்கிய பின் நேரும் நற்சுகம்.நிர்மலவிண் நீந்துகையில் நினைத்துப் பார்இதைநாற்றம் கொண்டிட தேகமிட்டவள் ஊற்றித் தீயினைநாளதில் நெருப்பாக்கிட நான் நீங்குவேன் உனைசேற்றெனும் மணல் கொண்டுசெய்யுடல் சிந்தனைதனைசீரழித்திடும் யாக்கை என்கிற தீமையுமில்லைபோற்றிட விண்ணில் போவதி லெந்தப் புதுமையும் இலைபூத்துக்கொண்ட இப்பொய்யுடல் விட்ட போது இன்நிலைஏற்றிடுமவள் ஈற்றினிலெமை கொள்ளும் நாள்வரைஇவ்வுலகினில் காண்பது மெய்யுணர்வின் பொய்நிலைசீற்றம் கொள்ளுணர் ஆற்றலுமற்ற பேய்களின்நிலைசிந்தி இந்நிலம் தந்தபின்கொள்ளும் குருதிக்கூட்டினைகாற்றினைக் கொண்டு ஊதிய இக்காமப் பையினைகட்புலனொடு காட்சி விம்பமும் ஏற்றும் காதலைவேற்று எண்ணங்கள் வேண்டி மெய்யினில் ஆக்கும்வேட்கையைவிட்டொரு விதம் வெளியில்சென்றிட விரும்பினாலுனைஆற்றென அகமோடி கண்டந்த அன்புச்சோதியைஆக்கிடும் அகவேதனை தரும் நெஞ்சத்தோசையைகூற்றென மெய்யைக் கூறின் யாக்கை தீயில் போம்வரைகூடி உன்னுடன் நான் இருப்பது திண்ணம் வேறில்லை
No comments:
Post a Comment