Tuesday 20 January 2015

துரதிஷ்டம்



நீலமலையினின் சோலைக் குயிலொன்று 
   நின்று பாடுது - அது 
நேசமுடன் கூவ வானமழை மீறிச் 
    சோவெனக் கொட்டுது
மேலடி வானிடை மேகம் சிவந்திட  
   மேன்மை கொள்ளுது - அதை 
மாலைக் கருமிருள் மங்கிடச் செய்துமே    
   மாயம் கூட்டுது
கோலம் அதிவிரை கொஞ்சும் கடலலை 
   கூடி ஓடுது  - அது
கொள்ளுங் கரைமணல் துள்ளி விழுந்தபின் 
  கூசித் திரும்புது
சீலத்தொடு மனம் செந்தமிழ்ப் பாட்டினில் 
  சேர்ந்து காணுது - அதைச்
சோக மிழைந்தொரு சேதிவந்தே மனம் 
   சோரக் காணுது

வாலைக்  கொண்டோரினம் வந்து கிளைதொற்றி 
  வளைந்து தூங்குது  - அந்த 
வேளை கிளை முறிந்தாடி மண்ணில் வீழ 
   வெகிழும் குரங்கது
சாலை நடை பாதை தன்னந் தனியொரு 
  சீவன் போகுது - அது
சார்ந்து செல்லும் திசை மூங்கில் துளைகாற்று 
  சூவென் றூதுது
மூலைத் தெருவினில் கோவிலடிக் கடை 
   மாலை தொங்குது - அந்த
மாலைகள் சாமியின் தோளையெண்ண மங்கை 
     கூந்தல்  ஏறுது
நாலைக் குணம் கொண்ட நாரிகையின் நடை 
  நளினம் போடுது - அதில்
நீளக் கிடந்த கல் நேர்விழி. ஏய்த்திட 
  நடை தள்ளாடுது

No comments:

Post a Comment